by அ.இராமநாதன் » மார்ச் 29th, 2017, 8:46 pm
சவம் சென்ற சாலை…
சிதறிக் கிடந்த
பூக்களின்
முணுமுணுப்பை
எந்த கால்களும் கேட்கவில்லை…
யாரோ இறந்ததற்கு
எங்களை ஏன்
கொன்றீர்கள் என்பதை!
–
உங்களுக்கு மணமானாலும்
நீங்கள் பிணமானாலும்
நோயானாலும், குணமானாலும்
ரணமாவது நாங்கள் தான்!
–
பாலியல்
தொழிலாளியின்
தலையில்
அழகாகிறோம்!
–
அரசியல்வாதியின்
கழுத்தில்
அழுக்காகிறோம்!
–
எங்கள் வர்ணங்கள்
வேறு என்றாலும் அதில்
ஜாதி கிடையாது
எங்கள் நறுமணம்
நூறு என்றாலும் அதில்
போலி கிடையாது!
–
எங்களை மதிக்காமல்
மிதிப்பவர்களே…
நீங்கள் இறந்தால் மீண்டும்
பிறப்பதில்லை!
–
நாங்கள் உதிர்வதே
மலர்வதற்குத்தான்!
–
—————————
— நிஷாத் பானு, சென்னை.
வாரமலர்